நடுவனேரியில் சாலை பணிகளை முடிக்க கோரிக்கை

இளம்பிள்ளை, டிச.10: காகாபாளையம்-இளம்பிள்ளை செல்லும் சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. நடுவனேரி பகுதியில் சாலையின் இருபுறமும் ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு, பல மாதங்கள் ஆன நிலையில், பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் டூவீலரில் செல்பவர்கள், எதிரே வரும் வாகனங்களுக்கு வழி விடுவதற்காக சாலையை விட்டு கீழே இறங்கும்போது தவறி விழுந்து படுகாயமடைந்து வருகின்றனர். ஒப்பந்ததாரர் பணி செய்வதில் மெத்தனம் காட்டி வருவதாக, வாகன ஓட்டிகள் புகாரளித்துள்ளனர்.  நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடி ஆய்வு செய்து பணிகளை முழுமையாக செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: