வில்வித்தை போட்டியில் இடைப்பாடி மாணவர்கள் சாதனை

இடைப்பாடி, டிச.10: கல்வித்துறை சார்பில் கோவையில் மாநில அளவிலான வில்வித்தை போட்டி நடந்தது. இதில், சேலம் மாவட்டம் இடைப்பாடியை சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் சௌந்தரராஜன், கிரண்ராஜ், கிஷோர், சர்வேஸ், நித்தீஷ், சபரி, சிவனேஷ், முக்கேஷ், நந்தினி, சிகந்த், சச்சிவ் ஆகியோர் வெற்றி பெற்று தங்க பதக்கம் வென்றனர். இதேபோல், வெள்ளி, வெண்கல பதக்கமும் இடைப்பாடியை சேர்ந்த மாணவர்கள் வென்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு இடைப்பாடியில் பரிசளிப்பு மற்றும் பாராட்டு விழா நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு பில்டு வில்வித்தை சங்க சேலம் மாவட்ட தலைவர் முருகன் தலைமை வகித்தார். தமிழ்நாடு பைக்கா விளையாட்டு சங்க தலைவர் டாக்டர் தர்மலிங்கம் சிறப்பு விருந்தினராக கலந்து ெகாண்டார். இதில் பைக்கா விளையாட்டு சங்க ஆலோசகர் சண்முகம், பயிற்ச்சியாளர்கள் சந்திரன், சதீஷ்ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Related Stories: