×

செல்லிபாளையத்தில் தரைப்பாலத்தை மேம்பாலமாக மாற்ற வேண்டும்

திருச்செங்கோடு, டிச.10: திருச்செங்கோட்டில், செல்லிபாளையத்தில் தரைப்பாலத்தை சீர்செய்து மேம்பாலமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்செங்கோடு தாலுகா எலச்சிபாளையம் ஒன்றியம், செல்லிபாளையம் கிராமத்தின் வழியாக திருமணிமுத்தாறு செல்கிறது. கடந்த 15 ஆண்டுக்கு முன், இந்த ஆற்றின் குறுக்கே பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தரைப்பாலம் அமைக்கப்பட்டது. மழைக்காலத்தின் போது, ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கும் சமயங்களில் தரைப்பாலத்தை மூழ்கடித்துச் செல்லும். அப்போது, பாலத்தில் யாரும் கடந்து செல்ல முடியாது. இதனால், பல கி.மீ., தூரம் சுற்றி மற்ற இடங்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதன் காரணமாக தொழிலாளர்கள் மற்றும் மாணவ,மாணவிகள் கடும் சிரமத்தை எதிர் கொள்ள வேண்டி உள்ளது. எனவே, செல்லிபாளையம் தரைப்பாலத்தை மேம்பாலமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Selipalayam ,
× RELATED ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்