×

ஜன.8ம் தேதி பொது வேலைநிறுத்த போராட்டத்தில் திரளாக பங்கேற்பு

குமாரபாளையம், டிச.10:  ஜனவரி 8ம் தேதி நடைபெறும் அகில இந்திய அளவிலான பொது வேலைநிறுத்த போராட்டத்தை வெற்றி பெற செய்வது என, குமாரபாளையத்தில் நடைபெற்ற கூட்டுகுழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவது, ஜிஎஸ்டி வரியை முறைப்படுத்துவது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜனவரி 8ம் தேதி பொது வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதென மத்திய தொழிற்சங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பான ஆலோசனை கூட்டம் குமாரபாளையத்தில் நடைபெற்றது. ஏஐடியூசி தொழிற்சங்க செயலாளர் பாலசுப்பிரமணியம் தலைமை வகித்து பேசினார். இதில், பல்வேறு தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் செல்வராஜ், சண்முகம், பாலுசாமி, சுப்பிரமணியம், அருள்.ஆறுமுகம், ஜானகிராமன், விசுவநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விவாதித்தனர்.மத்திய தொழிற்சங்கம் அறிவித்துள்ள பொது வேலைநிறுத்த போராட்டம் குறித்து, பொதுமக்கள், தொழிலாளர்கள் மத்தியில் விளக்கி, அவர்களை போராட்டத்தில் பங்கேற்க செய்வது என முடிவு செய்யப்பட்டது. இதற்காக ஜனவரி 3ம் தேதி வேன் பிரசாரம் மேற்கொள்வதெனவும் தீர்மானிக்கப்பட்டது. ஜனவரி 8ம் தேதி நடைபெறும் பொது வேலைநிறுத்த போராட்டத்தில் திரளாக பங்கேற்பது என தொழிலாளர்கள் உறுதி எடுத்துக் கொண்டனர்.

Tags : strike action ,
× RELATED போராட்ட கால ஒழுங்கு, குற்ற நடவடிக்கை...