×

ஓமலூர் அருகே புகையிலை பதுக்கி விற்ற வாலிபர் கைது

ஓமலூர், டிச.10: ஓமலூர் அருகே 130 கிலோ புகையிலை பொருட்களை பதுக்கி விற்பனை செய்த வாலிபரை தாரமங்கலம் போலீசார் கைது செய்தனர்.ஓமலூர் அடுத்த தொளசம்பட்டி போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தாரமங்கலம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, எம்.செட்டிப்பட்டியில் சந்தேகத்துக்கு இடமாக நின்றிருந்த நபரை பிடித்து விசாரித்தனர். அப்போது, அவர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான குட்கா, பான்பராக், ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. தொடர்ந்து, அருகிலுள்ள வீட்டில் பதுக்கி வைத்திருந்த 130 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், பச்சனம்பட்டி அடுத்த மகாலட்சுமி நகரை சேர்ந்த ஜெயமுருகன்(39) என்பது தெரிய வந்தது. இவர் கடந்த 15 ஆண்டுகளாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஓமலூர் கிளை சிறையில் அடைத்தனர்.

Tags : Omalur ,
× RELATED சேலம் மாவட்டம் ஓமலூரில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை..!!