×

டிரைவரை தாக்கிய 2 பேர் தலைமறைவு

கிருஷ்ணகிரி, டிச.10: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியை சேர்ந்தவர் அழகர்சாமி (28) லாரி டிரைவர். இவர் தனது லாரியில் நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில், காவேரிப்பட்டணத்திலிருந்து பாலக்கோடு செல்லும் ரோட்டில் உள்ள கருக்கன் சாவடி பகுதியில் சென்று கொண்டிருந்தார்.  அப்போது டூவீலரில் வந்த 2 வாலிபர்கள், லாரியை முந்தி சென்று லாரிக்கு வழி விடாமல் நடு ரோட்டில் டூவீலரை நிறுத்தினர்.இதனால் லாரி டிரைவருக்கும், டூவீலரில் வந்தவர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வாலிபர்கள் அங்கிருந்த  மது பாட்டிலை எடுத்து லாரி டிரைவர் அழகர்சாமியை பலமாக தாக்கி தப்பி சென்றனர். இதில் படுகாயமடைந்த அழகர்சாமியை மீட்ட அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.இது குறித்து தகவலறிந்து வந்த காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் அழகர்சாமியை மது பாட்டிலால் தாக்கியவர்கள், காவேரிப்பட்டணம் அருகே சின்ன காவாப்பட்டி பகுதியை சேர்ந்த திருமால் (21) மற்றும் அவரது நண்பர் சாமி என்பதும் தெரியவந்தது. அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.

Tags :
× RELATED நாமக்கல்லை சேர்ந்த தாய் மகன் உள்பட 4 பேர் கைது