×

ரயில் மோதி பெண் பலி

தர்மபுரி, டிச.10: கர்நாடக மாநிலம் பெங்களூர் சிக்பல்லாபூர்  பகுதியை சேர்ந்தவர் பக்ருதீன். இவரது மனைவி ரிகனா(43). இவர் தொப்பூர்  தர்காவிற்கு, காரைக்கால் பயணிகள் ரயிலில் நேற்று முன்தினம் வந்தார். தொப்பூர்  ரயில்வே ஸ்டேஷனில், ரயிலில் இருந்து இறங்கும் போது, தவறி விழுந்து ரயில் மோதி  உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த தர்மபுரி ரயில்வே போலீசார், ரிகனாவின் சடலத்தை கைப்பற்றி, தர்மபரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags :
× RELATED சூதாடிய 3 பேர் கைது