×

ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

கிருஷ்ணகிரி, டிச.10: கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் 18வது மாநில அளவிலான கராத்தே போட்டி நடந்தது. இப்போட்டியில் செந்தாரப்பள்ளி ஆக்ஸ்போர்டு பள்ளி சார்பில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகி மகேந்திரன், பள்ளி முதல்வர் இளங்கோ ஆகியோர் பரிசு வழங்கி, பாராட்டினர்.
நிகழ்ச்சியில் கராத்தே மாஸ்டர் மாரியப்பன் பங்கேற்று, தற்காப்பு கலையின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.இதில் பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் கலந்துகொண்டனர். முடிவில், ஆசிரியை வாசுகி நன்றி கூறினார்.*

Tags : Oxford School ,
× RELATED தேசிய வாலிபால் போட்டிக்கு ஆர்.என். ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவி தேர்வு