×

அரூர் பகுதியில் சரக்கு வாகனங்களில் ஆபத்தான பயணம்

அரூர், டிச.10: அரூர் பகுதியில் செல்லும் சரக்கு வாகனங்களில் ஆபத்தான பயணம் மேற்கொள்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க ேவண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.  அரூர், மொரப்பூர், தீர்த்தமலை, கம்பைநல்லூர், ஊத்தங்கரை உள்ளிட்ட பகுதிகளில் விளையும் கரும்பு, மரவள்ளி கிழங்கு உள்ளிட்ட விளைபொருட்கள் கோபாலபுரம், பாலக்கோடு ஆகிய இடங்களில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலை மற்றும் மரவள்ளி கிழங்கு பாப்பிரெட்டிப்பட்டி, சேலம் பகுதிகளில் உள்ள சேகோ அரவை ஆலைகளுக்கு, லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. அப்போது பாரம் ஏற்றி செல்லும் லாரிகள் மீது, தொழிலாளர்கள் அபத்தை உணராமல் பயணம் செய்து வருகின்றனர். இதனால் அடிக்கடி விபத்துகளும் நடந்து வருகிறது. சரக்கு வாகனங்களில் பயணம் செய்ய கூடாது என, போக்குவரத்து ேபாலீசார் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தியும், இது ேபான்ற சம்பவங்கள் நடந்து வருகிறது. எனவே, சரக்கு வாகனங்களில், பயணம் செய்வதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க ேவண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Tags : area ,Aroor ,
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...