×

மணியம்பாடியில் உயிர் பலி வாங்க காத்திருக்கும் குடிநீர் தொட்டி

கடத்தூர், டிச.10: கடத்தூர் அருகே தர்மபுரி செல்லும் மணியம்பாடி சாலையோரத்தில், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட ஏர்வால்வு, குடிநீர் தொட்டி உள்ளது. இதன் மூலம் சுற்றுவட்டார பகுதிகளுக்கு தண்ணீர் திருப்பி விடப்படுகிறது. இந்த குடிநீர் தொட்டி திறந்த நிலையில் உள்ளதால், இந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  எனவே ஏர்வால்வு தொட்டி அமைந்துள்ள இடத்தில், விழிப்புணர்வு பலகைகள் அமைக்க அதிகாரிகள்
நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Maniyambadi ,
× RELATED மணியம்பாடியில் மக்கள் தொடர்பு முகாம்