×

பள்ளி மாணவர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை பயிற்சி

கடத்தூர், டிச.10: கடத்தூர் பேரூராட்சி திடக்கழிவு மேலாண்மை கூடத்தில், பள்ளி மாணவர்கள் பயிற்சி பெற்றனர். கடத்தூர் பேரூராட்சி திடக்கழிவு மேலாண்மை கூடத்தில், தனியார் பள்ளி மாணவர்கள் பயிற்சி பெற்றனர். இதில், திடக்கழிவுகளின் வகைகள், உருவாகும் இடத்தில் தரம் பிரித்தல், அளவு மதிப்பீடு, திடக்கழிவுகளின் கலவை தொகுப்பு, மக்கும் குப்பை, மக்காத குப்பை மற்றும் அபாயகர குப்பைகளை வகைப்படுத்தும் வழிமுறைகள், மறுசுழற்சிக்கு பயன்படாத கழிவுகள், நுண் உரக்குடில் கருத்தாக்கம், செயலாக்கம், பராமரிப்பு பணிகள், மண்புழு உரக்குடில் ஆகியவை குறித்து விளக்கப்பட்டது. இப்பயிற்சி முகாமில், பேரூராட்சி செயல் அலுவலர் ராஜாஆறுமுகம், இளநிலை உதவியாளர் மோகன், செந்தில் மற்றும் துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.




Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா