உளுந்தூர்பேட்டை, டிச. 10: உளுந்தூர்பேட்டை அருகே கணையார் கிராமத்தை சேர்ந்தவர் இளங்கோவன். இவருடைய மகள் ரம்யா(17) என்பவர் பிளஸ் 2 படித்துவிட்டு வீட்டில் இருந்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று பெற்றோருடன் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தவர் இரவு 11 மணி அளவில் பார்த்த போது காணவில்லை. உறவினர் வீடுகள் உள்ளிட்ட பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இது குறித்து எடைக்கல் காவல்நிலையத்தில் ரம்யாவின் தாய் சகுந்தலா என்பவர் கொடுத்த புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் அகிலன் வழக்கு பதிந்து மாயமான ரம்யாவை தேடி வருகிறார்.