கள்ளக்குறிச்சி, டிச. 10: கள்ளக்குறிச்சி அருகே செல்லம்பட்டு கிராமத்தை சேர்ந்த பெண் கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.30 லட்சம் மோசடியில் ஈடுபட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கிரண்குராலாவிடம் பாதிக்கப்பட்ட செல்லம்பட்டு கிராம மக்கள் ஒரு புகார் மனு அளித்தனர். அதில் கூறியதாவது: கள்ளக்குறிச்சி அடுத்த செல்லம்பட்டு கிராமத்தை சேர்ந்த முருகன் மனைவி சரஸ்வதி என்பவர் அதே கிராமத்தை சேர்ந்தவர்களான அமிர்தவள்ளி, சத்தி, கல்பனா, அன்புமணி, ராஜகுமாரி, கமலா, லட்சுமி, மீனா, கலைச்செல்வி உள்ளிட்ட சுமார் 80 பேர்களிடம் தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்று தருவதாக கூறி ஆதார் அட்டையை ஒவ்வொருவரிடம் பெற்றுக்கொண்டு கடன் ஏதும் வாங்கி தரவில்லை.