×

விபத்தில் வாலிபர் பலி

நெல்லிக்குப்பம், டிச. 10: நெல்லிக்குப்பம் அருகே மேல்பட்டாம்பாக்கம் நத்தமேட்டை சேர்ந்தவர் செல்வராஜ் (36). இவர் பண்ருட்டியில் உள்ள இறைச்சி கடையில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வேலையை முடித்து
விட்டு தனது பைக்கில் பண்ருட்டியில் இருந்து வந்து கொண்டிருந்தார். நாராயணபுரம் அருகே வந்து கொண்டிருந்தபோது எதிரே கடலூரில் இருந்து பண்ருட்டி நோக்கி சென்ற தனியார் பஸ், பைக் மீது மோதியது. இதில் செல்வராஜ்
சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவலறிந்த நெல்லிக்குப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று செல்வராஜியின் உடலைக் கைப்பற்றி கடலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : accident ,
× RELATED பொன்னமராவதி குப்பைக் கிடங்கில்...