×

பல்கலை மாணவி தற்கொலை வழக்கில் காதலன் அதிரடி கைது

புவனகிரி, டிச. 10: பரங்கிப்பேட்டை அருகே உள்ள அகரம் பு.மானம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகள் சத்யா (20). இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உள்ள அறிவியல் கல்லூரியில் எம்எஸ்சி மைக்ரோ பயாலஜி பட்டப் படிப்பு படித்து வந்தார். சத்யாவின் தாய், தந்தை இறந்துவிட்டதால் இவர் தனது சித்தப்பா மற்றும் தாத்தா, பாட்டி பராமரிப்பில் வளர்ந்து வந்துள்ளார். சத்யா தனது வீட்டிற்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் பெட்ரோல் பங்க் ஊழியரான புஷ்பராஜ் (28)
என்பவரை காதலித்துள்ளார். இந்நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு புஷ்பராஜியிடம் கேட்டதாகவும், அதற்கு புஷ்பராஜ் மறுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த சத்யா கடந்தமாதம் 3ம் தேதி இரவு தனது வீட்டில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து அவரது சித்தப்பா புவியரசன் பரங்கிப்பேட்டை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.இநநிலையில் இந்த வழக்கை விசாரித்து வந்த பரங்கிப்பேட்டை இன்ஸ்பெக்டர் அமுதா (பொ), சத்யாவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது காதலன் புஷ்பராஜ் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

Tags : Lover's Action Arrested In University Student Suicide Case ,
× RELATED திண்டிவனத்தில் 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்