×

திட்டக்குடி அருகே கிராவல் மண் கடத்திய லாரி டிரைவர் கைது

திட்டக்குடி, டிச. 10: திட்டக்குடி அருகே அனுமதியின்றி கிராவல் மண் கடத்தி வந்த டிப்பர் லாரியை போலீசார் பறிமுதல் செய்து டிரைவரை கைது செய்தனர். திட்டக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுபிக்ஷா மற்றும் போலீசார் புலிவலம் நெடுஞ்சாலையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு டிப்பர் லாரியை பிடித்து சோதனை நடத்தினர். அதில் லாரியில் சுமார் 3 யூனிட் கிராவல் மண் இருந்தது தெரியவந்தது. விசாரணையில், லாரியை ஓட்டி வந்தவர் திட்டக்குடியை அடுத்துள்ள பெருமுளை மேற்கு தெருவை சேர்ந்த யோகநாதன் (38) என்பதும், அவரிடம் கிராவல் மண் எடுத்து வந்ததற்கான முறையான அனுமதி எதுவும் இல்லாமல் இருந்ததும் தெரியவந்தது. தொடர் விசாரணையில் அவர் தொழுதூர் பகுதியில் இருந்து கிராவல் மண் கடத்தி வந்தது தெரியவந்தது. இதுகுறித்து திட்டக்குடி போலீசார் வழக்குப்பதிந்து அந்த டிப்பர் லாரியை கிராவல் மண்ணுடன் பறிமுதல் செய்து, வாகனத்தை ஓட்டி வந்த யோகநாதனை கைது செய்தனர். 

Tags :
× RELATED சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது