×

மாநகரில் டெங்கு காய்ச்சல் பரவுவதால் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

திருப்பூர், டிச.10: பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் ஹபீபுர்ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது.சாகுல்ஹமீது சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.இதில் புதிய மாவட்டதலைவராக ஹபீபுர்ரஹ்மான், செயலாளராக முஹம்மது ரபீக் ஆகியோர் தேர்வுசெய்யப்பட்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:மாவட்டம் முழுவதும் டெங்கு காய்ச்சல் மற்றும் வைரஸ் காய்ச்சல்கள் பரவி வருவதால் அதனை கட்டுப்படுத்தும் விதமாக மாநகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.திருப்பூர் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தப்பட வேண்டும். திருப்பூரில் சட்டவிரோத போதை பொருட்கள் விற்பனையை தடுக்க காவல்துறை நடவடிக்கை மேற்க்கொள்ள வேண்டும்.பருவமழை தீவிரமடைந்திருப்பதால் நொய்யல் ஆற்றை தூர்வார வேண்டும். திருப்பூரில் பொருளாதார மந்தநிலை காரணமாக சிறு குறு தொழில்  நிறுவனங்கள் பெரும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது எனவே திருப்பூரின் பனியன் தொழிலை பாதுகாக்கவும் சிறுகுறு தொழிலாளர்களை பாதுகாக்கவும் ஆளும் மாநில அரசு போர்க்கால அடிப்படையில் முன்னேற்ற திட்டங்களை செயல்படுத்தி நடவடிக்கை எடு்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : city ,
× RELATED ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை தொடர்ந்து...