திருப்பூர், டிச.10: திருப்பூர் மாநகராட்சி பகுதியில் குப்பை அள்ளும் பணியை தனியார் நிறுவனத்திடமிருந்து பெற்று, மீண்டும் மாநகராட்சி நிர்வாகமே, பணியாற்ற துவங்கியது.திருப்பூர் மாநகராட்சியில் தற்போது 60 வார்டுகள் உள்ளன. இந்த 60 வார்டுகளிலும் உள்ள வீடுகள், பின்னலாடை தொழில் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் வியாபார நிறுவனங்களில் இருந்து தினமும் சுமார் 540 டன் குப்பை சேகரமாகிறது. ஆனால் போதுமான துப்புரவு தொழிலாளர்கள் இல்லை. இதை சரிக்கட்ட கடந்த 2014ம் ஆண்டு 2வது மற்றும் 3வது மண்டலங்களுக்கு உட்பட்ட 16வது வார்டு முதல் 45வது வார்டு வரை உள்ள 30 வார்டுகளில் குப்பை அள்ளும் பணி தனியாருக்கு விடப்பட்டது. ஆனால், முழுமையான அளவு குப்பைகளை அள்ளப்படவில்லை. குடியிருப்பு பகுதிகளில் குப்பைகள் தேங்கி வந்த நிலையில், ரோட்டிலும் குப்பைக் கழிவுகள் கொட்டப்பட்டு, மலைபோல் தேங்கி, கடும் சுகாதாரக்ேகடு ஏற்பட்டு வந்தது. இதுகுறித்து பல்வேறு தரப்பிலிருந்தும் புகார் எழுந்து வந்தது. பல இடங்களில் பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்நிலையில், ஒப்பந்தம் எடுத்த தனியார் நிறுவனத்தின் ஒப்பந்த காலம் வருகிற 15ம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், இதன் ஒப்பந்தம் நீட்டிக்கப்படவில்லை. துப்புரவு பணியை மாநகராட்சி நிர்வாகமே மீண்டும் மேற்கொள்ள முடிவு செய்து, அப்பணியை நேற்று முதல் துவக்கியது.