நிப்ட்-டி கல்லூரியில் விளையாட்டு போட்டிகள்

திருப்பூர், டிச.10: திருப்பூர், நிப்ட்-டி கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டி நேற்று நடந்தது.திருப்பூர், சிட்கோ முதலிபாளையத்தில் அமைந்துள்ள நிப்ட் டி நிட்வேர் பேஷன் கல்லூரியில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த அணைத்து பள்ளி மாணவ மாணவிகளின் பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தும் நோக்கில் ‘நிப்ட் டி  மாஸ்’  விளையாட்டு போட்டி கல்லூரி மைதானத்தில் நேற்று நடந்தது.இதில் கையுந்து பந்து, கபடி, பூப்பந்து, சதுரங்கம், டேபிள் டென்னிஸ், தடகள போட்டிகள்  நடைபெற்றது. இதில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். முன்னதாக நிப்ட் டி கல்லூரி முதல்வர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முருகேஸ்வரி தலைமை விருந்தினராக கலந்துகொண்டு போட்டிகளை துவக்கி வைத்தார். இப்போட்டியில் 42 பள்ளிகளை சேர்ந்த  950க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் பங்கேற்றனர்.

Related Stories: