கார் மோதி தொழிலாளி பலி

வெள்ளகோவில்,டிச.10: காங்கயம் சத்யா நகர் பகுதியை சேர்ந்தவர்  அய்யாவு(55), கூலி தொழிலாளி. கடந்த 3ம் தேதி ஓலப்பாளையத்திற்கு வேலைக்கு வந்து விட்டு திரும்பி காங்கயத்திற்கு மொபெட்டில் திரும்பி வந்து கொண்டிருந்தார். எல்லைக்காட்டுவலசு அருகே செல்லும் போது பின்னால் வந்த கார் மொபட் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அய்யாவுவை அக்கம்பக்கத்தினர் காங்கயம் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார். விபத்து குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: