100 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

கோவை, டிச.10:  கோவை செல்வபுரம் பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் நேற்று சோதனை நடத்தினர். பல்வேறு வணிக கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பதாக வந்த தகவலை தொடர்ந்து இந்த சோதனை நடந்தது. இந்த சோதனையில் ஒரு ஆயில் கடையில், மூட்டை மூட்டையாக புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. சுமார் 100 கிலோ எடையில், 2.5 லட்ச ரூபாய் மதிப்பிலான அந்த புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இவற்றை பதுக்கிய தாமஸ் (37) என்பவரை ேபாலீசார் கைது செய்தனர். கர்நாடகா மாநிலத்தில் இருந்து கோவைக்கு புகையிலை பொருட்கள் அதிகளவு கடத்தி வரப்பட்டு பதுக்கப்படுவதாக தெரிகிறது.

சிலர் இவற்றை வாங்கி சிறு கடைகளுக்கு சப்ளை செய்து வருகின்றனர். இதை தடுக்க சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Related Stories: