×

அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் வாகனங்கள் பறிமுதல்

ஈரோடு, டிச.10: ஈரோட்டில் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து விட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் ஈரோடு எஸ்பியிடம் புகார் மனு அளித்தனர். அருந்ததியர் இளைஞர் பேரவை மாநில அமைப்பாளர் வடிவேல் தலைமையில் வந்த நிர்வாகிகள் எஸ்பி சக்திகணேசனிடம் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் பலியான சம்பவத்தில், உயிரிழந்த குடும்பத்தினருக்கு நீதி கேட்டு போராடிய தலைவர்களை கைது செய்தததை கண்டித்து ஈரோடு பழைய ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் கடந்த 3ம் தேதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம். போராட்டத்தில் ஈடுபட்ட 11 பேரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். கைதான எங்களின் நான்கு சக்கர மற்றும் இரண்டு சக்கர வாகனங்களை சூரம்பட்டி போலீசார் சட்டத்திற்கு புறம்பாக பறிமுதல் செய்து வைத்துள்ளனர். எனவே, எங்களது வாகனங்களை எவ்வித நிபந்தனையின்றி மீண்டும் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர்.

Tags : protesters ,
× RELATED இஸ்ரேல்-ஹமாஸ் போரை நிறுத்த நடவடிக்கை...