சூலூர், டிச.10 ; சூலூரில் அரிசி வாங்கும் குடும்ப அட்டைதார்ர்களுக்கு வழங்குவதற்காக 1.5 லட்சம் இலவச வேட்டி சேலைகள் வந்தன.
ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக்கு அரிசி பெறும் குடும்ப அட்டைதார்ர்களுக்கு தமிழக அரசின் சார்பில் இலவச வேட்டி சேலைகள் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு சர்க்கரை அட்டைதார்ர்களையும் அரிசி பெறும் அட்டையாக மாற்றிக் கொள்ளலாம் என அரசு உத்தரவிட்டதைத் தொடர்ந்து பெரும்பாலான சர்க்கரை அட்டைதாரர்கள் தங்கள் குடும்ப அட்டைகளை அரிசி பெறும் அட்டைகளாகக மாற்றிக் கொண்டனர். இதனால் இலவச வேட்டி சேலை பெறும் பயனாளிகளின் எண்ணிக்கை இந்த ஆண்டு அதிகரித்துள்ளது.