கோவை, டிச. 10: சோனியாகாந்தி பிறந்தநாளையொட்டி கோவை கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் சோனியாகாந்தி 73வது பிறந்த நாள் விழா நேற்று நடந்தது. இதையொட்டி, கோனியம்மன் கோயிலில் மாநில செயல்தலைவர் மயூரா ஜெயக்குமார் தலைமையில் சிறப்பு வழிநாடு நடந்தது. பின்னர், பிரசாதம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், நிர்வாகிகள் பச்சைமுத்து, வீனஸ் மணி, குருசாமி, கிருஷ்ணமூர்த்தி, கருணாகரன், தமிழ்செல்வன், ராம்கி, கோவை போஸ்,
இராம.நாகராஜ், வக்கீல் கருப்புசாமி, திலகவதி, குணசேகரன், ஜெயபால், பாஸ்கர், கேபிள் வினோத், காந்தகுமார், சச்சின் சிவக்குமார், கார்த்திக், அசோக்குமார், பரமசிவம், சீனிவாசன், விஜயகுமார், வடவள்ளி ரங்கநாதன், கு.பே.துரை, உமாபதி, துளசிராஜ், டென்னிஸ் செல்வராஜ், உமாராணி, காமராஜ்துல்லா உள்பட பலர் பங்கேற்றனர்.
கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், காந்திபார்க் பாலதண்டாயுதபாணி கோயிலில் நேற்று சிறப்பு வழிநாடு நடந்தது. மாவட்ட தலைவர் வி.எம்.சி. மனோகரன் தலைமை தாங்கினார். இதையொட்டி, பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், நிர்வாகிகள் சொக்கம்புதூர் கனகராஜ், அழகு ஜெயபாலன், சின்னராஜ், விஜயகுமார், காயத்ரி, வெள்ளிங்கிரி, பேரூர் மயில், லாலி ரோடு செல்வம், செல்வபுரம் ஆனந்த், காட்டூர் சோமு, ஜாமாலுதீன், கோவை அனீபா, சக்தி சதீஷ், கதிரேசன், காளிதாஸ், தங்கமணி, மணி, சத்தியநாராயணன், நடராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.