சாத்தான்குளத்தில் தீக்குளித்த திமுக பிரமுகர் சாவு

சாத்தான்குளம், டிச. 10:  சாத்தான்குளம் தச்சமொழி தெருவைச் சேர்ந்தவர் சந்திரன்(50). திமுக பகுத்தறிவு பாசறை நகர அமைப்பாளராக பொறுப்பு வகித்து வந்த இவருக்கு திருமணம் ஆகவில்லை. உடல் நலக்குறைவுக்கு ஆளான இவரால், உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த தாயாரையும் கவனிக்க முடியவில்லை. இதனால் விரக்தியில் இருந்துவந்த சந்திரன், கடந்த 4ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத போது உடலில் மண்ணெண்ணெய்  ஊற்றி தீக்குளித்தார். இதில் பலத்த தீக்காயமடைந்த நிலையில் இவரை மீட்ட அக்கம்பக்கத்தினர்  நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி  நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து சாத்தான்குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: