கோவில்பட்டி, டிச. 10: கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு ஜீவ அனுக்கிரகா பொதுநல அறக்கட்டளை மற்றும் சூர்யா பார்மஸி சார்பில் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது. ஜீவ அனுக்கிரகா பொதுநல அறக்கட்டளை நிறுவனர் ராஜேந்திரன், அறக்கட்டளை நிர்வாகி சண்முகலட்சுமி ஆகியோர் அரசு மருத்துவமனை நிலைய அலுவலர் டாக்டர் பூவேஸ்வரியிடம் இதை வழங்கினர். மருத்துவமனை தலைமை செவிலியர் இந்திராகாந்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.