ஓட்டப்பிடாரம் தொகுதியில் மக்கள் நீதி மய்யத்தினர் விழிப்புணர்வு பிரசாரம்

நெல்லை, டிச. 10:   தூத்துக்குடி மாவட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியை பலப்படுத்தும் வகையில் கட்சியினர் பல்வேறு விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தூத்துக்குடி மத்திய மாவட்ட மக்கள் நீதி மய்யம் சார்பில் ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களுக்கு வாகனங்களில் சென்று மக்கள் சந்திப்பு இயக்கம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு பிரசாரம் நடத்தப்பட்டது. மத்திய மாவட்டச் செயலாளர் சேகர் தலைமை வகித்தார். முன்னிலை வகித்த வக்கீல் அணியைச் சேர்ந்த ரங்கநாதன், மாவட்ட நிர்வாகி அக்பர் ஆகியோர், இந்த விழிப்புணர்வு பிரசாரத்தை கொடியசைத்துத் துவக்கிவைத்தனர். கிராமம், கிராமமாகச் சென்று மக்களைச் சந்தித்த கட்சியினர், மக்கள் நீதி மய்யம் அமைக்கப்பட்டதின் நோக்கம், எதிர்கால திட்டம், மக்களுக்கு ஆற்றும் சேவைகளை விளக்கிப் பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் பாலா, பிரபு, மகளிர் அணி முத்துமணி, சுடலை, ஆன்ரூஸ், ராஜாசந்தானம், தவபுத்திரன், செல்வசிவலிங்கம், பட்டுராஜ், இஸ்ரவேல், பாலா ராமச்சந்திரன், பரமசிவம், சக்திவேல், சாமுவேல் கண்ணன், முத்துராஜ்,  மாரியப்பன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், சார்பு அணியினர், தொண்டர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

Related Stories: