தூத்துக்குடி, உடன்குடியில் சோனியாகாந்தி பிறந்தநாள் விழா

தூத்துக்குடி, டிச. 10: தூத்துக்குடியில் காங்கிரஸ் சார்பில் சோனியா காந்தி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியின் 73வது பிறந்த நாள் விழா தூத்துக்குடியில் காங்கிரஸ் சார்பில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி மாநகர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் நடந்த விழாவுக்குத் தலைமை வகித்த மாவட்டத் தலைவர் முரளிதரன், கேக் வெட்டி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொது மக்களுக்கு வழங்கினார். விழாவில் இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளர் ஸ்டாலின், வர்த்தக காங்கிரஸ் மாவட்டத் தலைவர் டேவிட் பிரபாகர், ஊடக பிரிவு மாவட்டத் தலைவர் முத்துமணி, மகிளா காங்கிரஸ் தலைவி முத்து விஜயா, மண்டல தலைவர்கள் ஜசன்சில்வா, சேகர், தங்கராஜ், செந்தூர்பாண்டி, மாநகர துணைத்தலைவர்கள் பிரபாகரன், அருணாசலம், ராஜாராம்,  ஜான் வெஸ்லி, பிரபாகர், ராமமுர்த்தி, மாவட்ட செயலாளர்கள் கோபால், ஜெயராஜ், மரியசெல்வராஜ், வார்டு தலைவர்கள் கிருஷ்ணன், மாரியப்பன்,கோபி, முருகன், சண்முகசுந்தரம், மகிளா காங்கிரசை சேர்ந்த  உமா, சாந்தி, விண்மதி, தெய்வகனி, முத்துலெட்சுமி, ராஜாத்தி, லட்சுமி, மாநில செயற்குழு உறுப்பினர் பேரையூர் ஜேசுதாஸ், சிவன்யாதவ், அகஸ்டின் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

உடன்குடி:  இதே போல் உடன்குடியில் வட்டார காங்கிரஸ் சார்பில் நடத்தப்பட்ட சோனியா காந்தி பிறந்தநாள் விழாவுக்கு வட்டாரத்  தலைவர் துரைராஜ் ஜோசப் தலைமை வகித்தார். நகரத் தலைவர் முத்து, மாநில மகிளா  காங்கிரஸ் துணைச்செயலாளர் அன்புராணி, மூத்த காங்கிரஸ் தலைவர் வெற்றிவேல்,  தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் தனீஷ் முன்னிலை வகித்தனர். சிறப்பு  அழைப்பாளராகப் பங்கேற்ற மாநில காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் சிவசுப்பிரமணியன், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். விழாவில் மூத்த காங்கிரஸ் தலைவர்  பிரான்சிஸ், முன்னாள் பேரூராட்சி உறுப்பினர் சுலோச்சனா, நகரச் செயலாளர்  செல்ட்டன், மாவட்ட பிசி அணி செயலாளர் ஜெயசிங், செல்வராஜ், கோயில்மணி மற்றும்  பலர் பங்கேற்றனர். காங்கிரஸ் செயலாளர் ராமமூர்த்தி நன்றி கூறினார்.

Related Stories: