சாத்தான்குளம், டிச. 10: சாத்தான்குளம் அடுத்த கட்டாரிமங்கலம் காலனி கிழக்குத் தெருவை சேர்ந்தவர் சின்னத்துரை (67). கூலி தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் பேய்க்குளம் வந்துவிட்டு பின்னர் அதே ஊரைச் சேர்ந்த தனிஸ்லாஸ் (40) என்பவரது லோடு ஆட்டோவில் ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தர். அப்போது எதிரே வந்த வாகனத்திற்கு வழி விடுவதற்காக திருப்பியபோது சாலையோர பள்ளத்தில் லோடு ஆட்டோ கவிழ்ந்தது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சின்னத்துரையும், ஓட்டுநர் தனிஸ்லாஸ்சும் அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சின்னத்துரை, பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சாத்தான்குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.