தூத்துக்குடியில் ரகளையை கண்டித்த சகோதரர்களுக்கு கத்திக்குத்து

தூத்துக்குடி, டிச. 10:  தூத்துக்குடி  பூபால்ராயர்புரத்தை சேர்ந்தவர்கள் ஜோசப் (52), சகாயராஜ் (45).  சகோதரர்களான இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் பூபால்ராயர்புரம் பகுதியில் உள்ள டீக்கடை முன்பாக நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த தூத்துக்குடி  சந்தனமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த விஜய் என்பவர், சாலையில் நின்றபடி ரகளையில் ஈடுபட்டாராம். இதை ஜோசப்  கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த விஜய், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஜோசப்பை குத்தியுள்ளார். அப்போது அதை தடுக்க வந்த  சகாயராஜூவையும் கத்தியால் குத்தினார். இதில் படுகாயமடைந்த சகோதரர்கள் இருவரும் தூத்துக்குடி அரசு மருந்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புகாரின் பேரில் வழக்குப் பதிந்த தூத்துக்குடி வடபாகம் போலீசார், தப்பியோடிய  விஜய்யை தேடி வருகின்றனர்.

Related Stories: