தூத்துக்குடி டிச. 10: தூத்துக்குடி கடற்கரையில் மத்திய தொழில் பாதுகாப்புபடை சார்பில் தூய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
தூத்துக்குடி என்டிபிஎல் அனல் மின் நிலைய பாதுகாப்பு பணியில் மத்திய தொழில் பாதுகாப்பு படை சார்பில் தூய்மை இந்தியா திட்டம் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி துறைமுக கடற்கரையில் தூய்மை இந்தியா திட்டம் தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமாண்டென்ட் ஆச்சாரியா தலைமை வகித்தார். இன்ஸ்பெக்டர் அன்புசெல்வன் முன்னிலை வகித்தார்.