×

வர்த்தக சங்க பிரமுகர் மீது வழக்கு பதிவு

மயிலாடுதுறை, டிச.10: மயிலாடுதுறையில் ஏற்கனவே 2 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. தற்பொழுது மயிலாடுதுறை மகாதானத் தெருவில் புதிதாக டாஸ்மாக் கடை நேற்று முன்தினம் மாலை திறக்கப்பட்டது. அங்கே டாஸ்மாக் கடை அமைப்பதை கண்டித்து வர்த்தக சங்கத்தினர் ஊர்வலமாக சென்று மயிலாடுதுறை ஆர்டிஓ அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு மனு ஒன்றை ஆடி ஓவிடம் அளித்தனர். காவல்துறை அனுமதி வாங்காமல் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக மயிலாடுதுறை எஸ்ஐ பார்த்திபன் அளித்த புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீசார் வர்த்தக சங்க தலைவர் செந்தில்வேல், ரோட்டரி அய்யாசாமி, தட்சிணாமூர்த்தி, ஜெயக்குமார், மதியழகன், பாஸ்கர், கிரிஜா, சாமிநாதன் கண்ணன், முட்டை சேகர், பாலு, பாண்டுரங்கன் ,முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் தனபால் மாசிலாமணி உட்பட மற்றும் பலர் மீதும் இரண்டு சட்டப்பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags : trade union leader ,
× RELATED பல்வேறு பிரச்னைகள் குறித்து...