×

நாகை எஸ்பி வேண்டுகோள் மாதிரவேளூர் சாலை சீரமைக்கப்படுமா?

கொள்ளிடம், டிச.10: கொள்ளிடம் அருகே கொள்ளிடம் ஆற்றங்கரையிலிருந்து மாதிரவேளூர் செல்லும் 2 கி.மீ தூரம் தார் சாலையை மேம்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே, கொள்ளிடம் ஆற்றின் வலது கரையிலிருந்து மாதிரவேளுர் செல்லும் 2 கிலோ மீட்டர் தூர தார் சாலை மேம்படுத்தப்பட்டு 5 வருடங்களுக்கும் மேலாகிறது. இதனால் இந்த சாலை மிகவும் பழுதடைந்து 10 வருடங்களில் குண்டும் குழியுமாக உள்ளது. மாதிரவேளுர் செல்வோர்கள் இந்த சாலையைக் கடந்து செல்வதற்கு மிகுந்த அவதியடைகின்றனர்.

சுற்று வட்டார கிராமங்களான கீரங்குடி, சரஸ்வதிவிளாகம், கொன்னக்காட்டுப்படுகை உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள் மாதிரவேளுர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று வர சிரமம் அடைகின்றனர். வயது முதிர்ந்த ஆண் மற்றும் பெண்கள் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்வதற்கும், அரசு உயர்நிலைப்பள்ளிக்கு செல்லவும் இந்த சாலையை கடந்து செல்லும் போது மிகுந்த வேதனையுடன் சென்று வருகின்றனர். உயர்நிலைப்பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் சைக்கில்களில் செல்லும் போதும், நடந்து செல்லும் போதும் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். எனவே கொள்ளிடம் ஆற்றின் வலது கரையில் உள்ள கம்பி போட்ட மதகிலிருந்து மாதிரவேளுர் செல்லும் பழுதடைந்துள்ள 2 கிலோ மீட்டர் தூர தார் சாலையை மேம்படுத்த உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags : SP ,Moderavelur Road ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலின்போது கட்சி பாகுபாடின்றி பணியாற்ற வேண்டும்