×

சீர்காழியில் உள்ளாட்சி தேர்தல் நடக்குமா? மனுதாக்கல் செய்ய மக்கள் தயக்கம்

சீர்காழி, டிச.10: சீர்காழியில் உள்ளாட்சி தேர்தல் நடக்குமா? நடக்காதா என்ற அச்சத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய யாரும் முன்வரவில்லை. இருப்பினும் ஒரு பெண் மட்டும் ஊராட்சி தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்தார். சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்ய நேற்று முதல் மனுக்கள் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது சீர்காழி ஒன்றியத்தில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கு 3 4 ஆகிய இரண்டு வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கு நேற்று யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
இதேபோல் ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கு 21 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கு நேற்று யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை இதேபோல் 37 ஊராட்சிகள் உள்ளன இந்த ஊராட்சிகளில் பூம்புகார் ஊராட்சிக்கு மட்டும் சுமித்ரா என்ற பெண் ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார் இதேபோல் கிராம ஊராட்சி வார்டுகள் 309 உள்ளன இந்த வார்டு உறுப்பினர் பதவிக்கு 37 பேர் மனுத் தாக்கல் செய்துள்ளன நேற்று மனு தாக்கல் செய்ய காலை 10 முதல் மாலை 5 மணி வரை நேரம் ஒதுக்கப்பட்ட நிலையில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. பல்வேறு அரசியல் கட்சிகள் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக நீதிமன்றத்தை நாடி உள்ளதால் தேர்தல் நடக்குமா நடக்காதா என்ற அச்சத்தில் பெரும்பாலும் வேட்புமனு தாக்கல் செய்ய முன்வரவில்லை. இதனால் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.

பலத்த பாதுகாப்பு
சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு நேற்று மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர், ஒன்றிய குழு உறுப்பினர், ஊராட்சி மன்ற தலைவர் ஆகிய பதவிகளுக்கு வேட்புமனுக்கள் பெற அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தனர். வேட்புமனு தாக்கல் செய்ய அதிகளவில் கூட்டம் வரும் என்பதால் நாகை எஸ் பி செல்வநாகரத்தினம் உத்தரவின்பேரில் சீர்காழி டிஎஸ்பி வந்தனா மேற்பார்வையில் சீர்காழி இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர்கள் ராஜா சுரேஷ் கலியமூர்த்தி  மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags : elections ,Sirkazhi People ,
× RELATED மக்களவை தேர்தலையொட்டி சிறப்பு...