கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வள்ளியூர் டிஜேஆர் ரெஸ்டாரன்டில் சிறப்பு விற்பனை திட்டம் துவக்கம்

வள்ளியூர், டிச. 10: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வள்ளியூர் டிஜேஆர் ரெஸ்டாரன்டில் சிறப்பு விற்பனை திட்டம் துவங்கியுள்ளது. இத்திட்டம் ஜனவரி 1ம் தேதி வரை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும். நெல்லை மாவட்டத்தில் வளர்ந்து வரும் முதன்மையான நகரங்களில் ஒன்றாகத் திகழும் வள்ளியூரில் புறவழிச்சாலையில் அமைக்கப்பட்ட டிஜேர்ஆர் ரெஸ்டாரன்ட் என்னும் தனித்துவமிக்க ஓட்டல் சைவ, உணவு வகைகளை அறுசுவையுடன் வழங்குவதில் முதன்மை வகிக்கிறது. இங்கு வருகைதரும் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கே ஏற்ப உணவுவகைகளை உடனுக்குடன் சூடாகவும், சுவையாகவும் வழங்குவதில் சிறப்பான சேவை ஆற்றிவருகிறது. இந்நிலையில் இந்தாண்டுக்கான கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு விற்பனை திட்டத்தை கடந்த 8ம் தேதி துவக்கியுள்ளது. இதன்படி தினமும் நண்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை வாடிக்கையாளர் ஒருவர் ஆர்டர் செய்யும் உணவு, அவரது நண்பருக்கும் வழங்கப்படும். ஆனால், இதில் நண்பர் சாப்பிட்டதற்கான பில் தொகையை மட்டும் செலுத்தினால் போதும். பிரன்ட்ஸ் டூ பிரன்ட்ஸ் டிரீட் என்ற பெயரிலான இந்த சிறப்பு விற்பனை திட்டம் வரும் ஜனவரி 1ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும்.

இதே போல் தினமும் இரவு 7 மணி முதல் 11 மணி வரை கப்பிள்ஸ் டின்னர் ஆப்பர் என்ற பெயரில் மற்றொரு சிறப்பு விற்பனை திட்ட விற்பனை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி தம்பதி சகிதமாக இங்கு வந்து வாடிக்கையாளர் ஆர்டர் செய்யும் உணவு, வாடிக்கையாளரின் மனைவிக்கும் கொடுக்கப்படும். இதில் மனைவி சாப்பிட்டதற்கான பில் தொகையை மட்டும் செலுத்தினால் போதும் என்பது குறிப்பிடத்தக்கது.  இதுபோன்ற சிறப்பு சலுகை விற்பனையில் பங்குபெற விரும்பும் வாடிக்கையாளர்கள் டிஜேஆர் ரெஸ்டாரன்டின் தனிச்சிறப்பு என்ன? என்ற கேள்விக்கான பதிலை 7373775842 என்ற செல்போன் எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பினால் போதும். தங்களுக்கு பிரியமானவர்களுக்கு விருந்து அளிக்கும் வாடிக்கையாளர்களுக்கு விருந்து அளிக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த சிறப்பு விற்பனை திட்டங்கள் வரும் ஜனவரி 1ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

Related Stories: