×

10 ஆண்டுகளுக்கு பின் வைகை நதியில் 65 நாட்களை கடந்து தொடர்ந்து நீர்வரத்து

தேனி, டிச. 9: மேகமலை வனப்பகுதியில் பெய்யும் மழையால் தேனி வைகை நதியில் 10 ஆண்டுகளுக்கு பின்னர் 65வது நாளாக நீர் வரத்து இருந்து வருகிறது.கடந்த செப்டம்பர் மாதம் கடைசி வாரத்தில் தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. தொடர்ந்து மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. வைகை நதியின் நீர்பிடிப்பு ஆதாரப் பகுதியான மேகமலை வனப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழையால் வைகை நதியில் தொடர்ந்து நீர்வரத்து இருந்து வருகிறது.இதுகுறித்து மேகமலை வனவிலங்குகள் காப்பக வார்டன் போஸ்லே சச்சின் துக்காரெ கூறியதாவது: வைகை நதியில் ஆண்டுக்கு 9 மாதங்கள் நீர் வரத்து இருக்கும். கடந்த 20 ஆண்டுகளாக நீர்வரத்து மெல்ல, மெல்ல குறைந்து 10 ஆண்டுகளுக்கு முன்னர் மூன்று மாதம் நீர்வரத்து இருந்தது. அதன் பின்னர் மேலும் குறைந்தது.முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கிடைக்கும் நீர் மூலமே வைகை அணை நிறைந்தது. இந்த நீர் மூலம் ஐந்து தென் மாவட்டங்களுக்கு குடிநீருக்கும், பாசன தேவைக்கும் பயன்படுத்தப்பட்டு வந்தது.

வைகை நதியில் நீர்வரத்து குறைந்து 2017ம் ஆண்டில் பதினேழு நாட்கள் மட்டுமே நீர்வரத்து இருந்தது. 2018ம் ஆண்டில் நீர்வரத்து முழுமையாக இல்லாமல் இருந்தது. தற்போது அதாவது 10 ஆண்டுகளுக்கு பின்னர் மேகமலை வனப்பகுதியில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. மேகமலையில் உள்ள அத்தனை அணைகளும் நிரம்பி விட்டன. நீர்வீழ்ச்சிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வைகை நதியில் 65 நாட்களை கடந்து தொடர்ந்து நீர் வரத்து உள்ளது. குறிப்பாக, வைகை நதியின் நீர்வரத்தால் வைகை அணை இந்த ஆண்டு முழு கொள்ளவான 69 அடியை எட்டி உள்ளது. இந்த ஆண்டு முல்லைப் பெரியாற்றில் இருந்து வைகை அணைக்கு வந்த நீரை விட, வைகை ஆற்றில் இருந்து வந்த நீர் தான் அதிகம். இன்னும் ஓரிரு நாளில் வைகை அணை முழுமையாக நிரம்பி வழியும். வனப்பாதுகாப்பினை கடுமைப்படுத்தி வனவளம் அதிகரித்துள்ளதும் இந்த ஆண்டு கூடுதல் மழை பெய்ய முக்கிய காரணமாக இருந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி மழை தொடர்ந்தால் இந்த மாதம் முழுக்க தண்ணீர் வரும் வாய்ப்புகள் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.யிலின் தாக்கம்இருக்கும்.

Tags : Vaigai River ,
× RELATED அழகர்மலையில் இருந்து வந்த...