×

சத்தியமங்கலம் அருகே பொதுமக்கள் எதிர்ப்பால் டாஸ்மாக் கடை மூடல்

சத்தியமங்கலம், டிச. 9:   சத்தியமங்கலம் அருகே அரியப்பம்பாளையம் பகுதியில் புதியதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடை பொதுமக்கள் எதிர்ப்பால் மூடப்பட்டது.  சத்தியமங்கலம் அருகே உள்ள அரியப்பம்பாளையம் பகுதியில் சத்தியமங்கலம் - கோபிசெட்டிபாளையம் சாலையில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் நேற்று முன்தினம் திடீரென டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இது குறித்து தகவலறிந்த அப்பகுதி பொதுமக்கள் நேற்று மதியம் டாஸ்மாக் கடை முன்பு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த சத்தியமங்கலம் போலீசார், வருவாய்த்துறையினர் மற்றும் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இன்று சத்தியமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தியபின் டாஸ்மாக் கடை திறப்பது குறித்து முடிவெடுக்கலாம். அதுவரை மதுபானக்கடை திறக்கப்படமாட்டாது என அதிகாரிகள் பொதுமக்களிடம் உறுதியளித்தனர்.போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Tags : Task Shop ,protest ,Satyamangalam ,
× RELATED ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே...