கோவில்பட்டியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

கோவில்பட்டி, டிச. 9: கோவில்பட்டியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.   கோவில்பட்டியில் ரோட்டரி சங்கம், போக்குவரத்து காவல் துறை சார்பில்  மெயின்ரோட்டில் உள்ள ஞானமலர் பெட்ரோல் பங்க்கில் சாலை பாதுகாப்பு குறித்த  விழிப்புணர்வு முகாம் நடந்தது. ரோட்டரி மாவட்ட சாலை பாதுகாப்பு பிரிவு  தலைவர் முத்துசெல்வன் தலைமை வகித்தார். ரோட்டரி சங்கச் செயலாளர்  முத்துமுருகன், ஞானமலர் பெட்ரோல் பங்க் உரிமையாளர் மைக்கேல் அமலதாஸ்   முன்னிலை வகித்தனர். போக்குவரத்து காவலர் பாலசுப்பிரமணியன்  வரவேற்றார்.

  முகாமில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற போக்குவரத்து  எஸ்ஐ நாராயணன், போக்குவரத்து விதிமுறைகள் குறித்த துண்டுபிரசுரங்களை வாகன  ஓட்டுநர்களிடம் வழங்கினார். தொடர்ந்து, வாகனங்களில் முகப்பு  விளக்குகளில் கருப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன. இதே போல் மக்கள் கூடும்  இடங்களில்  சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டதோடு  வாகனஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு விதிகள் பற்றிய சிக்னல் அட்டை  வழங்கப்பட்டது. இதில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் பிரபாகரன், நடராஜன்,  போக்குவரத்து  காவலர்கள் ராஜகுரு, பெருமாள்ராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். போக்குவரத்து  காவலர் பால்கண்ணன் நன்றி கூறினார்.

Related Stories: