சாத்தான்குளம் டிச. 9: சாத்தான்குளம் அருகே சவேரியார்புரம் ஆர்.சி நடுநிலைப்பள்ளியில் விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா நடந்தது. விளையாட்டுவிழாவுக்கு சாலைப்புதூர் ஏக ரட்சகர் சபை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தரராஜ் தலைமை வகித்தார். விழாவில் தூத்துக்குடி நகர வட்டார கல்வி அலுவலர் ஜெயபாலன் அருள்பணியாளர்கள் பெனில்டாபாத்திமா, ஸ்டார்லின் வாழ்த்தி பேசினர். இதையடுத்து மாணவ. மாணவிகளுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடந்தது.மாலையில் நடந்த பள்ளி ஆண்டுவிழாவுக்கு சாத்தான்குளம் போலீஸ் சப்.இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார்.தலைமை ஆசிரியை ஜெஸ்மின் விண்ணரசி வரவேற்றார். வள்ளியூர் யுனிவர்சல் கல்லூரி பேராசிரியர் சுப்பிரமணியன், பாளை மறைமாவட்ட குரு சேவியர், அருள்பணியாளர் ஸ்டார்லின் பேசினர். பள்ளியில் பணிபுரிந்து பணி ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர் ஜேசுமணியை பாராட்டி தாளாளர் பீட்டர் பாஸ்டியன் கவுரவித்தார். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. நிகழச்சியில் உதவி ஆசிரியைகள் மெர்லின், கீதாஞ்சலி, அமலஜோதி லிட்வின், ஜான்சி லலிதா,ஆக்னஸ் லியோ செல்வி, ஆன்சி, பெனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.