கோவில்பட்டி, டிச.9: கோவில்பட்டியில் புனிதஓம் கான்வென்ட் மெட்ரிக்குலேசன் பள்ளியில் உலக மண் தினம் நடந்தது. கோவில்பட்டியில் புனிதஓம் கான்வென்ட் மெட்ரிக்குலேசன் பள்ளியில் புனித ஓம் கல்வி நிறுவனங்களின் தாளாளர் லெட்சுமணபெருமாள் வழிகாட்டுதலின்படி உலக மண் தினம் நடந்தது. பள்ளியின் தேசிய பசுமைப்படை சார்பில் நடந்த இந்த விழாவில் மண் தினத்தை முன்னிட்டு மண் வளத்தை பாதுகாப்போம், இயற்கை சூழலை பாதுகாப்போம் போன்றவற்றை வலியுறுத்தி பள்ளி மாணவ, மாணவியினரின் மண் வளம் விழிப்புணர்வு பேரணி நடந்தது. பின்னர் ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர் மண் வளத்தை பாதுகாப்போம் என உறுதி மொழி எடுத்து கொண்டனர். தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் செல்வஸ்ரீ மண்வளத்தை காப்பது மற்றும் மண்ணின் தன்மைகள் பற்றி பேசினார்.