×

கோவில்பட்டி அருகே அடுத்தடுத்து கார்கள் மோதி விபத்து

கோவில்பட்டி, டிச.9: கோவில்பட்டி நாலாட்டின்புதூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மதியம் வழக்கம் போல் போக்குவரத்து நடந்து கொண்டு இருந்தது. அப்போது நெல்லையில் இருந்து கோவில்பட்டி நோக்கி வரக்கூடிய சாலையில் திடீரென பைக் ஒன்று சாலையில் புகுந்து விட பின்னால் வந்து கொண்டு இருந்த 4 கார்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளனது. இதில் ஒரு கார் திருச்செந்தூரில் இருந்து கடலூர் நோக்கி சென்றதாகும். மற்ற 3 கார்கள் நெல்லையில் இருந்து கோவில்பட்டிக்கு வந்தவை. விபத்தில் கடலூர் நோக்கி சென்ற காரில் வந்த கதிரேசன், அவருடன் வந்தவர்களுக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டது. மற்றவர்கள் அனைவரும் எவ்வித காயமும் இல்லாமல் அதிர்ஷ்டவாசமாக உயிர் தப்பினர். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் நாலாட்டின்புதூர் போலீசார் விரைந்து வந்து, காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.  விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து நாலாட்டின்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Kovilpatti ,
× RELATED கோவில்பட்டியில் 16 ஆண்டுகள் தலைமறைவாக இருந்து வருபவருக்கு வலை