வேலூர், டிச.9: குடியாத்தம் அருகே தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்று 10 டிராக்டர் வாங்கி ₹40 லட்சம் மோசடி செய்த 9 பேர் மீது வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடியாத்தம் வளத்தூரை சேர்ந்தவர்கள் பாலாஜி, சோமசுந்தரம், பச்சையப்பன், ஏழுமலை, செல்வகுமார், கார்த்திகேயன், கருணீக சமுத்திரத்தை சேர்ந்த மணி, நடுபேட்டையை சேர்ந்த ஜாஹீர்அகமது, தட்டப்பாறையை சேர்ந்த பார்த்திபன் ஆகிய 9 பேரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடியாத்தத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் டிராக்டர் வாங்குவதற்காக விண்ணப்பித்துள்ளனர்.