சென்னை: நெல்லை, பொதிகை எக்ஸ்பிரசில் வரும் பயணிகள் எழும்பூர் வரை பயணம் செய்ய டிக்கெட் பரிசோகரிடம் கூடுதல் கட்டணம் செலுத்தி பயணிக்கலாம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: சென்னை எழும்பூர்- நெல்லை இடையே இயக்கப்படும் நெல்லை எக்ஸ்பிரஸ் (12661), சென்னை எழும்பூர்- செங்கோட்டை இடையே இயக்கப்படும் பொதிகை எக்ஸ்பிரஸ்கள், அதைப்போன்று ரயில் எண் (12632) நெல்லை- சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும் நெல்லை எக்ஸ்பிரஸ், செங்கோட்டை- சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும் பொதிகை எக்ஸ்பிரஸ் (ரயில் எண் 12662) 4ம் தேதி முதல் எழும்பூரில் இருந்து வழக்கம் போல் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது.