இஎஸ்ஐசி சார்பில் குறைதீர் கூட்டம்: 11ம் தேதி நடக்கிறது

சென்னை: தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம் (இ.எஸ்.ஐ.சி) வெளியிட்டுள்ள அறிக்கை: தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம் சார்பில் தொழிலாளிகள், தொழில் முனைவோர் மற்றும் பயனாளிகளுக்காக குறைதீர்க்கும் நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, வரும் 11ம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு, குறைதீர்க்கும் நாள் கூட்டம், இ.எஸ்.ஐ கார்ப்பரேசன், மண்டல அலுவலகம், எண்.143, ஸ்டெர்லிங் ரோடு, நுங்கம்பாக்கம், சென்னை 600034 என்ற முகவரில் நடக்கிறது. எனவே அனைத்து பயனாளிகள் இந்த வாயப்பினை பயன்படுத்தி, தங்களது குறைகளுக்கு தீர்வு காணலாம்.

Related Stories: