×

விவசாயி தற்கொலை

பண்ருட்டி, டிச. 5: பண்ருட்டி அருகே ஏபி.குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சேட்டு மகன் புஷ்பராஜ் (29). விவசாயி. இவர் வீட்டில் அடிக்கடி மனைவியுடன் தகராறு செய்வார். இதனால் இவரது மனைவி கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் மன வேதனை அடைந்த புஷ்பராஜ் மனைவி இல்லாத ஏக்கத்தால் கடந்த 27ம் தேதி நிலத்திற்கு வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்துவிட்டு மயங்கி கிடந்தார். அப்போது இவரது அலறல் சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் நேற்று இறந்தார்.

Tags : suicide ,
× RELATED இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை