×

தென்பெண்ணையாற்றில் பெண் சடலம் மீட்பு

சூளகிரி, நவ.5: சூளகிரி அருகே தென்பெண்ணையாற்றில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் சடலமாக மீட்கப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டாரா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே பாத்தகோட்டா தென்பெண்ணையாற்றில் சுமார் 50 வயது பெண் சடலமாக மிதந்து கிடந்தார். இதை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து உத்தனப்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் கிராம நிர்வாக அலுவலர் மோகன், வருவாய் அலுவலர் மங்கையர் கரசிக்கும் தகவல் அளி்த்தனர். இதன்பேரில் போலீசார் மற்றும் வருவாய் அலுவலர் தென்பெண்ணையாற்று பகுதிக்கு விரைந்து சென்றனர். பின்னர் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து, ஆற்றில் கிடந்த பெண் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர்.

இதில் ஆற்றில் மீட்கப்பட்ட பெண்ணுக்கு வயது சுமார் 50 இருக்கும், பச்சை நிற ஜாக்கெட் அணிந்திருந்தார். அவர் யார்? எந்த ஊர் என்பது பற்றி தெரியவில்லை. மேலும் அவரை மர்ம நபர்கள் யாரேனும் கொலை செய்து ஆற்றில் வீசி சென்றனரா? அல்லது அவர் தற்கொலை செய்து கொண்டாரா என போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.தொடர்ந்து பெண்ணின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னர் தான் அவர் எப்படி இறந்தார் என்பது தெரிய வரும். மேலும் சூளகிரி மற்றும் அருகில் உள்ள கிராம பகுதிகளில் மாயமானவர்கள் குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.  

Tags : Female Corpse Recovery ,South Africa ,
× RELATED தென்ஆப்பிரிக்காவில் இருந்து வந்த பெண் சிவிங்கி புலி 5 குட்டிகளை ஈன்றது