×

கெலவரப்பள்ளி அணைக்கு 568 கனஅடி நீர் வரத்து

ஓசூர், நவ.5: கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து 568 கன அடியாக உள்ளது.கர்நாடக மாநிலத்தில் தென்பெண்னை ஆற்று நீர்ப்பிடிப்பு பகுதிகளான நந்திமலை, தொட்டப்பள்ளப்புரம், கே.ஆர்.புரம், பெங்களூரு சர்ஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் மழையை பொருத்து ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது.கடந்த சில தினங்களாக 968 கனஅடியாக இருந்த நீர் வரத்து நேற்று காலை நிலவரப்படி 568 கனஅடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 41.66 அடியாக (மொத்த கொள்ளளவு 44.28 அடி) உள்ளது.அணையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அணைக்கு வரும் நீர் அப்படியே ஆற்றில் திறந்து விடப்படுகிறது. தற்போது ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நிலக்கடலை, நெல் மற்றும் பூக்கள் பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.


Tags : Kelavarapalli Dam ,
× RELATED ஒசூர் கெலவரப்பள்ளி அணையில் நீர்...