திருமங்கலம், டிச. 5: திருமங்கலம் ஒன்றியத்திலுள்ள 169 வாக்குசாவடி மையங்களில் 33 மையங்கள் பதட்டமான மையங்களாக கண்டறியப்பட்டுள்ளன. கரடிக்கல், பெரியவாகைகுளம், கீழஉரப்பனூர், மேலஉரப்பனூர், கப்பலூர், சொக்கநாதன்பட்டி, சாத்தங்குடி, பன்னீர்குண்டு, அம்மாபட்டி, ஏ.கொக்குளம், செக்காணூரணி, கிண்ணமங்கலம், மொன்னமங்கலம், தங்களாசேரி, வலையபட்டி உள்ளிட்ட கிராமங்களில் அமைய உள்ள 33 வாக்குசாவடிமையங்கள் மிகவும் பதட்டமானவை என அதிகாரிகள் கணக்கிட்டு போலீசாரிடம் கூடுதல் பாதுகாப்பு கேட்டுள்ளனர்.