வெள்ளகோவில் நகரில் சாலைகளில் சுற்றித்திரியும் ஆடுகளால் வாகன ஓட்டிகள் அவதி

வெள்ளகோவில், டிச.5:  வெள்ளகோவில்  நகரில் சாலைகளில் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரியும் ஆடுகளால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் நகரில் ஆங்காங்கே பல இடங்களில் வெள்ளாடுகள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகிறது. இதனால் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகிறது. குறிப்பாக முத்தூர் ரோடு, தாராபுரம் ரோடு, கோவை ரோடு, மற்றும் பஸ் நிலையம் போன்ற பகுதிகளில் ஆடுகள் நடுரோட்டில் சுற்றி திரிகின்றன.  இவை சில சமயங்களில் நடுரோட்டில் ஊர்வலமாக செல்வது, ரோட்டில் படுத்து கொண்டு வாகனங்களுக்கு வழி விடாமல் நிற்கும் சம்பவங்களும் தொடர்ந்துள்ளது. மேலும் வாகனங்கள் செல்லும்போது திடீரெனே. ரோட்டின் குறுக்கே செல்வதால் வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழும் சம்பவமும் நடக்கிறது. எனவே, நகராட்சி நிர்வாகம் இதில் கடுமையான நடவடிக்கை எடுத்து ஆடுகள்  சாலைகளில் சுற்றித்திரிவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: