திருச்சி, டிச.6: அரை நிர்வாணத்துடன் சகதியில் உருண்டு போராட்டம் நடத்திய விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு மீது நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.திருச்சி இ.புதூர் சமூகநீதி மக்கள் உரிமை இயக்கம் பொதுச்செயலாளர் ஜான்ராஜ்குமார் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தார். தேர்தல் நடத்தை விதி அமலானதால் மனு பெட்டியில் மனுவை போட்டார். அவரது மனுவில் கூறியிருப்பதாவது: சமீப காலமாக விவசாயிகள் சங்கம் போராட்டம் என்ற போர்வையில் புனிதமாக கருதப்படும் விவசாயிகளை கொச்சைப்படுத்தும் நோக்கில் திருச்சியை சேர்ந்த தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு என்பவர் விநோத செயல்களை புகுத்தி இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசுவதும் செயல்படுவதும் கொள்கையாக வைத்துள்ளார். கடந்த நவ.29ம் தேதி விவசாயிகளை அரை நிர்வாணப்படுத்தி சகதியில் உருண்டு திருச்சி கலெக்டர் அலுவலகத்திலயே இவர் போராட்டம் நடத்தி உள்ளே நுழைகிறார்.